முதல் எழுதுகளம்.

ஒரு குழந்தையின் முதல் எழுதுகளம் வீட்டின் சுவர்தான். மொழிப்போருக் கெல்லாம் புறம் காட்டி ஒவ்வொரு குழந்தையும் தன் இஷ்டத்திற்கு எதையோ சுவற்றில் கிறுக்கித் தள்ளுகிறது. அத்தகைய கிறுக்கல்கள் கவிதையா ஓவியமா குழப்பம் இருக்க, சுவற்றில் கிறுக்கல்கள் இல்லாத வீடு குழந்தைகள் இல்லாத வீடு. அல்லது குழந்தைகளாக இல்லாத வீடு எனலாம். மனதை கொள்ளையடித்த அத்தகைய கிறுக்கல்களை வெள்ளையடிக்கும் முன்பு ஏதாவது செய்யலாமே என தோன்றியதுதான் இந்த டிஜிட்டல் ஓவியங்கள்.