ஒரு கதை - புதிய பகுதி ஆரம்பம்.

(ஒரு) கதை சொல்லலாம் என நினைக்கிறேன்.

சொந்தக் கதை, சோகக் கதை, வீட்டுக் கதை, நாட்டுக் கதை, உலக நடப்பு கதை இவை எதுவும் இல்லாமல் சிறுவயதிலிருந்து கேட்ட படித்த ரசித்த குட்டிக்குட்டி கதைகளை இந்த பகுதியில் உங்களுக்கு சொல்லலாம் என நினைக்கிறேன்.

புராண இதிகாசங்களில் தொடங்கி பஞ்ச தந்திர கதைகள், தெனாலிராமன் கதைகள், அக்பர் பீர்பால் கதைகள், விக்ரம் வேதா கதைகள், நீதிக் கதைகள், அம்புலி மாமா கதைகள், ஆன்மீகக் கதைகள், நாட்டுப்புற கதைகள், சூஃபி கதைகள் மற்றும் சுகபோக சாமியார்கள் சொன்ன கதைகள் என நம் பாரத நாட்டில் கதைகளுக்கு பஞ்சமில்லை அந்த கதைகளை கொஞ்சம் நக்கல் நையாண்டி கேலி கிண்டல் மற்றும் அடியேன் நினைத்துக் கொண்டிருக்கும் அதி புத்திசாலித்தனத்துடன் உங்களுக்கு சொல்லலாம் என நினைக்கிறேன்.


இந்த கதைகள் உங்களுக்கு புதிதாக இருக்கும் அல்லது நீங்கள் எப்போதாவது கேட்டதாகக் கூட இருக்கும். இந்த கதைகள் உங்களுக்கு புதிராக இருக்கும், உங்களை யோசிக்க வைக்கும். இந்த கதைகள் வாழ்வியலுக்கு தேவையான நீதியை போதிக்கும், ஏதோ ஒருநேரத்தில் ஒருவிதத்தில் உங்களுக்கு உதவக்கூடும். இவை எதுவும் இல்லாமல் இந்த கதைகள் படித்தவுடன் கொட்டாவி துணையுடன் தூக்கத்தையாவது வரவழைக்கும்.
விடுவதாக இல்லை.

(ஒரு) கதை சொல்லலாம் என நினைக்கிறேன்.