பஞ்ச தந்திரம்.
பஞ்ச தந்திரம் என்றதும் நமக்கெல்லாம் இரண்டு விஷயங்கள் சட்டென நினைவுக்கு வரும். காட்டில் சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது என விலங்குகளை மையமாக வைத்து சிறுவயதில் கேட்டு ரசித்த வாழ்க்கைக்கு பயனுள்ள பஞ்ச தந்திரகதைகள் மற்றும் கமலின் பஞ்ச தந்திரம் என்ற நகைக்சுவை திரைப்படம். இந்த இரண்டும் குதுகலமானவையே.
திரைப்படத்தை எடுத்துக் கொண்டால் கமல் + கூட்டணி, பிரஞ்சு தாடி, பிரிந்த மனைவி, பெங்களூர் டிரிப், பர்த்டே பார்ட்டி, ஜெயராமின் இங்கி பிங்கி பாங்கி , மேகி, டெட்பாடி, வைரம், ராம் ஒரு கதை சொல்லேன் தேவயானி, சின்ன கல்லு பெரிய லாபம், ஓட்டைவாய் யூகி சேது என அனைத்தும் நம்மை மகிழ்வித்தவைகளே.
அது போகட்டும்... பஞ்ச தந்திரம் என்றால் என்ன?
அது போகட்டும்... பஞ்ச தந்திரம் என்றால் என்ன?
அரசன் எப்படி இருக்க வேண்டும்? அமைச்சர் எப்படி நடக்க வேண்டும்? மக்கள் இப்படித்தான் வாழ்க்கையை வாழவேண்டும் என்பதற்கு நமது முன்னோர்கள் அந்த காலத்தில் பல நெறிமுறைகளை வகுத்து வைத்திருக்கின்றனர். ஆனால் தற்போது நிலவும் சூழ்நிலையில் அந்த நெறிமுறையான வாழ்க்கையை ஒருவன் கடைசிவரை கடைபிடித்து வாழ முடியுமா? என்பது சந்தேகம்தான். அதனால் என்ன? முடிந்தால் பார் இல்லையென்றால் இந்த ஐந்து அம்சங்களை வைத்து எப்படியாவது பிழைத்துக்கொள் என ஐந்து தந்திரங்களையும் நமக்காக அவர்கள் அளித்திருக்கின்றனர். அவைகளே பஞ்ச தந்திரங்கள் என அழைக்கப்பட்டன. அதாவது எப்படியோ வாழ்ந்தாக வேண்டும் என்பதற்கான ஐந்து தந்திரங்கள். அவைகள்
1. நட்பை கெடுப்பது (நண்பனை இழந்து பகைவனை பெறுவது).
2. நட்பை பெறுவது (பகை ஏற்படாமல் இருக்க தன்மோடு இணக்கமானவர்களோடு மட்டும் கூடி வாழ்வது).
3. அடுத்துக் கெடுப்பது (பகை உண்டானால் பகைவனோடு உறவாடி அவனை கெடுப்பது).
4. அடைத்தல் அழிப்பது (கையில் கிடைத்ததை எல்லாம் அழிப்பது).
5. ஆராயமல் செய்வது (எந்தவொரு காரியத்தையும் ஆராயாமல் வந்தால் மலை போனால் முடி எனத் தொடங்குவது).
சஸ்கிருத மொழியில்
1. மித்ர பேதம் - Mitra-bheda.
2. சுகிர்லாபம் - Mitra-Samprapthi.
3. சந்திர விக்ரஹம் - Kakolukiyam.
4. லப்தகானி - Labdhapranasam.
5. அசம்ரேசிய காரித்வலம் - Apariksitakarakam.
2. சுகிர்லாபம் - Mitra-Samprapthi.
3. சந்திர விக்ரஹம் - Kakolukiyam.
4. லப்தகானி - Labdhapranasam.
5. அசம்ரேசிய காரித்வலம் - Apariksitakarakam.
நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ எதோ ஒருவகையில் இந்த பஞ்ச தந்திரத்தை பிடித்துக் கொண்டுதான் நம் பிழைப்பு ஓடிக் கொண்டிருக்கிறது. அதனைத் தெரிந்துதான் நம் முன்னோர்கள் அழகாக தொகுத்தும் வைத்திருக்கிறார்கள் போலும். பிழைத்துக் கொள்வோம் தந்திரமாக.