ஹிட்லர்....


இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தீய சக்தி என்று ஹிட்லரை மிகச் சரியாக மதிப்பிட்டுவிடமுடியும். ஆனால் அவரைப் புரிந்து கொள்வது அவ்வளவு சுலபமல்ல. ஹிட்லரின் யூத வெறுப்பு தெரியும். ஆனால் காரணம்?
எவ்வளவு லட்சம் பேர், எப்படியெல்லாம் சித்திரவதை செய்யப்பட்டு கொன்றொழிக்கப்பட்டனர் என்பது தெரியும். ஆனால் எதற்காக? மனிதக் கற்பனைக்கு எட்டாத அளவுக்குக் குரூரமான, கச்சிதமான ஒரு கொலைத்திட்டத்தை வடிவமைக்கவேண்டிய அவசியம் என்ன?நாஜிகளால் லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்படும்போது சாதாரண ஜெர்மானியர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?ஹிட்லர் மட்டும்தான் அனைத்துக்கும் காரணமா?

ஹிட்லரை அவருடைய அத்தனை சிக்கல்களோடும் புதிர்களோடும் புரிந்துகொள்ள வேண்டுமானால் நாஜி ஜெர்மனி குறித்த மிக விரிவான ஒரு வரலாற்றுப் பார்வை தேவைப்படுகிறது.அத்தகைய ஒரு பார்வையை வழங்குவதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம்.முழுக்க முழுக்க விவாதங்களின் அடிப்படையிலும் சமீபத்தில் வெளிவந்த வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையிலும் எழுதப்பட்ட புத்தகம். நாஜி ஜெர்மனி குறித்து ஜெர்மானிய வரலாற்றாசிரியர்கள் தற்போது விவாதித்து வரும் சில அம்சங்களையும் ஹிட்லர் குறித்து நாம் கொண்டிருக்கும் பிம்பங்கள்மீது அவர்கள் எழுப்பும் சில அடிப்படையான சந்தேகங்களையும் இதில் காணலாம்.
இடதுசாரிகள் ஹிட்லரை எப்படி அணுகினார்கள், எப்படி மதிப்பிட்டார்கள் (அல்லது மதிப்பிடத் தவறினார்கள்) என்பதை மேலோட்டமாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். 

மருதன் ...

ஆங்கில இலக்கியம் படித்தவர். கல்கியில் தனது எழுத்துப்பணியை தொடங்கினார்.தற்போது கிழக்கின் ஆசிரியராக இருக்கிறார். முதல் நூல் திபெத்தின் அரசியல் போராட்ட வரலாறு. ஃபிடல் காஸ்ட்ரோ, சே குவேரா தொடங்கி மால்கம் எக்ஸ் வரையிலான புரட்சியாளர்களின் வாழ்க்கை வரலாறுகள் எழுதி உள்ளார். முதல் உலகப்போர்,இரண்டாம் உலகப்போர், இவரது புகழ்பெற்ற படைப்பு. 

ஹிட்லர் 
கிழக்கு பதிப்பகம் 
விலை -ரூ 150