அவள் அப்பா நான் மகள்.



விலங்குகள்
நிறைந்திருக்கும்
ஓவியத்தில்
ஒவ்வொன்றாய்
சுட்டிக் காட்டி
இது என்ன? கேட்கிறாள்
குட்டிதேவதை.
...
நான் வரிக்குதிரை
என்கிறேன்.
...
இது?
...
சிங்கம்
...
இது?
...
புலி.
...
இது?
...
ஒட்டகம்
...
ம்ம்..இது?
...
ஓநாய்.
...
இல்ல தப்பு
அது கரடி
ஒழுங்கா சொல்லு
அதட்டி உருட்டி
மிரட்டுகிறாள்.
...
கரடி.
...
ஆம் அது
கண்டிப்பாக
கரடியாகத்தான் இருக்கும்
ஏனென்றால்
இப்போது 
அவள் அப்பா
நான் மகள்.