பயணத்தின் சுவை.


மண்வாசனை காற்றுபோல், திடீர் மழை போல், வானவில் பார்க்கும் நிமிடம் போல், எப்போதாவது தென்படும் தாவணி பெண்கள் போல், பூட்டியிருக்கும் உறவுகளின் நினைவுகளைப்போல் சில பாடல்களைக் கேட்கும்போது தோன்றும். ஆடம்பரம், ஆர்ப்பாட்டம் இருக்காது, ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு இசை கிடையாது ஆனாலும் அந்த பாடல்களை கேட்கும்போது ஏதோ ஒரு ஸ்பரிசம் மெல்ல தழுவிக் கொள்ளும். வார்த்தைகள், காட்சியமைப்பு, இசைக் கருவிகளின் ஒழுங்கமைப்பு என மனதை தாலாட்டிச் செல்லும். அத்தகைய பாடல்களை தனியாக சேமித்து வைத்திருக்கிறேன். சில தூர பயணங்களுக்கு கூடவே தூக்கிச் செல்வேன். வாழ்கையின் சில சந்தோச நிகழ்வுகளைவும், இதுபோன்ற பாடல்களையும் அசைபோட்டுக் கொண்டே பயணிப்பது தனி சுகம்தான்.
"பயணத்தின் சுவையே நினைவுகளை அசைபோடுவதுதானே ". 
அப்படி கேட்கும் பாடல்களில் சில..