குட்டி (கரடி) கதை.
குட்டிதேவதை
கதை சொல்லத்
தொடங்கினாள்
நான்
...ம்
கொட்டிக் கொண்டிருந்தேன்.
அழகான
ஒரு காட்டுல
தாத்தா கரடி
பாட்டி கரடி
இருந்துச்சாம்.
...ம்
அதுகூட
அப்பா கரடியும்
அம்மா கரடியும்
ஒரு குட்டி கரடியும்
இருந்துச்சாம்.
...ம்
தினமும்
பாட்டி கரடிக்கும்
அம்மா கரடிக்கும்
சண்டை வருமாம்.
...ம்
ஒருநாள்
சண்டை பெருசாகி
தாத்தா கரடியும்
பாட்டி கரடியும்
காட்டை விட்டே
போயிடுச்சாம்
...ம்
சட்டென
கதைக்குள்
நுழைகிறது
அம்மா கரடி.
நாளைக்கு
ஸ்கூல் இருக்குல
அங்க என்ன
வெட்டிப் பேச்சு
சத்தம் போடாம
படுக்குறியா இல்லையா?
கொர்...ர்...ர்..ர்
மீதிக் கதை
முடியும் முன்பு
தூங்கியிருந்தது
அப்பா கரடியும்
குட்டி கரடியும்.