மழை.
இரவு 2.00 மணி பீகார்- பாட்னா லால்பக்ஹ் சாலையில் சுற்றிக் கொண்டிருந்தேன் வழக்கம்போல் போலீஸ் பிடித்துக் கொண்டார்கள். (ஹீ..ஹி அதிகமுறை மாட்டிக்கொண்டு விழித்திருக்கிறேன் ) நம்ம ஊரென்றால் எதாவது அரசியல்வாதி, தெரிந்த மாமா, மச்சான் பெயரைச் சொல்லி 50-100 கொடுத்து வந்துவிடலாம் ஆனால் இங்கு நிலமை வேறு. பீகாரில் அடியேனுக்கு தெரிந்த ஒரே நபர் நம்ப லாலுபிரசாத்யாதவ் மட்டுமே. வெளிஊர்-மொழியும் கொஞ்சம் சிரமமாக இருந்தது தெரிந்த ஆங்கிலத்தில் பேசி அடையாள அட்டையை காண்பித்து ஒருவாறு சமாளித்தேன்.
2.00 மணிக்கு உனக்கு இங்க என்ன வேலை? ...
சார், டீ குடிச்சிட்டு ஒரு தம் அடிச்சிட்டு போகலாம்....னு..... தூக்கம் வரவில்லை என்றேன்.
உண்மையான காரணமும் அதுதான். என் தூக்கத்தை கலைத்த படைப்பு இந்த ஈரான் நாட்டுத் திரைப்படம் "Baran".
மறுநாள் சுல்தான் என்பவர் கீழே விழுந்து கால்களை இழந்த நஜாப்பிற்கு பதிலாக அவரது 14 வயது மகன் ரஹ்மத்தை வேலைக்கு அழைத்து வருகிறார். கடினமான கட்டிட வேலை செய்ய முடியாமல் ரஹ்மத் திணறுகிறான் மெமர் சமையல் செய்யும் வேலையை ரஹ்மத்திடம் கொடுத்துவிட்டு லதீப்பை கட்டிட வேலைக்கு மாற்றுகிறார். இதனால் ரஹ்மத்திற்கு லதீப் சிறுசிறு தொல்லைகள் கொடுக்கிறான் அவனை அங்கிருந்து விரட்ட முயற்சி செய்கிறான்.
ருசியோடு ரஹ்மத் செய்யும் சமையலுக்கு அங்கு வேலை செய்யும் அனைவரும் அடிமையாகின்றனர் லதீப் மட்டும் அவனது சமையலை சாப்பிடாமல் தவிர்க்கிறான். ஒருநாள் லதீப் எதார்த்தமாக ரஹ்மத்தின் அறையை நோட்டமிடுகிறான். அனைவரும் வேலையில் மும்மரமாக இருக்க பாடலை முனுமுனுத்தபடி வேலைகளை முடித்துவிட்டு தன் தலைமுடியை சீவி, மீண்டும் டர்பனுக்குள் மறைத்துக் கொள்ளும் ரஹ்மத்தை நிழலாகக் கண்டு அவன் அதிர்சியடைகிறான்.
"ரஹ்மத் ஒரு பெண்".
அன்றிலிருந்து தனது செயல்களிலிருந்து லதீப் கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறான் வெறுத்து ஒதுக்க நினைத்த ரஹ்மத்தின் பார்வைக்காக ஏங்குகிறான். மேலும் அங்குவேலை செய்யும் ஆண்களிடமிருந்து அவளுக்கு பாதுகாப்பாகவும் இருக்கிறான். ஒருநாள் கடைக்குச் சென்று திரும்பிவரும் ஆப்கானிஸ்தான் அகதியான ரஹ்மத்தை factory laubour inspector பார்த்து விடுகிறார் லதீப் அவரிடம் இருந்து அவளை காப்பாற்றிவிட்டு காவல் நிலையம் செல்கிறான். மெமர் அவனை ஜாமீனில் எடுத்துவிட்டு ஆப்கானிஸ்தான் அகதிகளை அனைவரையும் வேலையிலிருந்து அனுப்புவதாக கூறுகிறார்.
இதனை அறிந்த லதீப் வருந்துகிறான். மேலும் மறுநாள் கட்டிட மேஸ்த்திரி மெமரை சந்தித்து காலில் விழுந்து பணம் கேட்கிறான் குடும்ப பிரச்சனையில் இருக்கும் அவர் மறுக்க தன்னிடம் இருக்கும் விளையுயர்ந்த பொருளான தனது அடையாள அட்டையை கள்ளத்தனமாக விற்கத் துணிகிறான் (ஆப்கானிஸ்தான், ஈரான், போன்ற அகதிகள் வாழும் நாடுகளில் அடையாள அட்டை என்பது விலைமதிக்க முடியாத சொத்து. அதை இழப்பது என்பது தன்னையே இழப்பதற்குச் சமமாக கருதப்படுகிறது) . கிடைக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு ரஹ்மத்(பரான்) வீட்டிற்குச் செல்கிறான். காலில் அடிபட்டதற்கான நஷ்ட ஈடாக மேஸ்த்திரி கொடுத்ததாக அந்த பணத்தை கொடுத்துவிட்டு திரும்புகிறான்.
லதீப் அங்கு வருகிறான் ரஹ்மத்தும் (பரான்) வீட்டிலிருந்து வெளிவருகிறாள். லதீப் முதல்முறையாக அவளது பெண்முகத்தை உடல் அருகாமையில் பார்க்கிறான் இருவரும் கண்களால் காதலை பரிமாறிக் கொள்கின்றனர். அவள் தன் கையில் இருக்கும் பையை தவறவிடுகிறாள் லதீப் அவளுடன் சேர்த்து தவறவிட்டவைகளை சேகரிகிறான். ரஹ்மத் நடக்கத் தொடங்குகிறாள் அவளது காலணி சேற்றில் மாட்டிக்கொள்கிறது லதீப் காலனியை எடுத்து அவளுக்கு அணிவிக்கிறான். சாமான்களை ஏற்றிய வண்டி கிளம்புகிறது அதற்குள்ளிருக்கும் ரஹ்மத் தன் முகத்தை மூடிக்கொள்கிறாள். லதீப் தனிமையில் நிற்கிறான் அவளது காலடித்தடம் சேற்றில் தெரிகிறது அவன் அதைப் பார்த்து புன்னகைக்கிறான். மழை தொடங்குகிறது தடம் மெல்ல மறைகிறது திரை இருள்கிறது மழைத்தூரல் ஒலியாகக் கேட்கிறது.
சில புத்தகங்களும் திரைப்படங்களும் அதன் முடிவும் நம்மை தூங்கவிடாது இன்றும் அதுதான் நிகழ்ந்தது அடியேனை பீகாரின் காவல் நிலையம் வரைக்கும் கொண்டு சென்றது.
"Baran" என்றால் "மழை" என்று அர்த்தம் திரைப்படத்தை ஒருமுறை பாருங்கள் அந்த மழையில் நீங்களும் நனையக்கூடும்.
Directed by - Majid Majidi.
Written by - Majid Majidi.
Music - Ahmad Pejman.
Language - Persian and Azeri.
Country - Iran.
Year - 2001.